எங்கே குழந்தையின்
கைகள் நீளுமோ
அங்கே ஒளிருக வெண்ணிலவே
எங்கே உனக்கு முன்
மனிதர் விழிப்பரோ
அங்கே தோன்றுக கதிரவனே
எங்கே விதவையர்
கூந்தல் காயுமோ
அங்கே மலருக பூவினமே
எங்கே பூவினம்
தூங்கி விழிக்குமோ
அங்கே சுற்றுக வண்டினமே
எங்கே புன்னகை
போலியில்லையோ
அங்கே சிரித்திடு பொன்னிதழே
எங்கே தன்னலம்
அழிந்து போகுமோ
அங்கே நீர்பொழி என்விழியே
எங்கே வேர்வைகள்
தீர்ந்து போகுமோ
அங்கே மழை கொடு மாமுகிலே
எங்கே ஏழையர்
அடுப்பு தூங்குமோ
அங்கே பற்றுக தீச்சுடரே
எங்கே கன்றுகள்
மிச்சம் வைக்குமோ
அங்கே சிந்துக கறவைகளே
எங்கே மனிதர்கள்
சைவமாவாரோ
அங்கே பாடுக பறவைகளே
எங்கே உழைப்பவர்
உயரம் உயருமோ
அங்கே சுழலுக ஆலைகளே
எங்கே விதைத்தவர்
வயிறு குளிருமோ
அங்கே விளைந்திடு நெல்மணியே
எங்கே கண்களில்
கள்ளமில்லையோ
அங்கே தோன்றுக கனவுகளே
எங்கே உறவுகள்
ஒழுக்கமாகுமோ
அங்கே வில்லெடு மன்மதனே
எங்கே பயணம்
மீளக்கூடுமோ
அங்கே நீளுக சாலைகளே
எங்கே மண்குடம்
காத்திருக்குமோ
அங்கே பரவுக ஆறுகளே
-கவிப்பேரரசு வைரமுத்து
புத்தகம்: வைரமுத்து கவிதைகள்
கைகள் நீளுமோ
அங்கே ஒளிருக வெண்ணிலவே
எங்கே உனக்கு முன்
மனிதர் விழிப்பரோ
அங்கே தோன்றுக கதிரவனே
எங்கே விதவையர்
கூந்தல் காயுமோ
அங்கே மலருக பூவினமே
எங்கே பூவினம்
தூங்கி விழிக்குமோ
அங்கே சுற்றுக வண்டினமே
எங்கே புன்னகை
போலியில்லையோ
அங்கே சிரித்திடு பொன்னிதழே
எங்கே தன்னலம்
அழிந்து போகுமோ
அங்கே நீர்பொழி என்விழியே
எங்கே வேர்வைகள்
தீர்ந்து போகுமோ
அங்கே மழை கொடு மாமுகிலே
எங்கே ஏழையர்
அடுப்பு தூங்குமோ
அங்கே பற்றுக தீச்சுடரே
எங்கே கன்றுகள்
மிச்சம் வைக்குமோ
அங்கே சிந்துக கறவைகளே
எங்கே மனிதர்கள்
சைவமாவாரோ
அங்கே பாடுக பறவைகளே
எங்கே உழைப்பவர்
உயரம் உயருமோ
அங்கே சுழலுக ஆலைகளே
எங்கே விதைத்தவர்
வயிறு குளிருமோ
அங்கே விளைந்திடு நெல்மணியே
எங்கே கண்களில்
கள்ளமில்லையோ
அங்கே தோன்றுக கனவுகளே
எங்கே உறவுகள்
ஒழுக்கமாகுமோ
அங்கே வில்லெடு மன்மதனே
எங்கே பயணம்
மீளக்கூடுமோ
அங்கே நீளுக சாலைகளே
எங்கே மண்குடம்
காத்திருக்குமோ
அங்கே பரவுக ஆறுகளே
-கவிப்பேரரசு வைரமுத்து
புத்தகம்: வைரமுத்து கவிதைகள்